தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் தொடர்ச்சி ( நிறைவுப்பகுதி )

 


                                                    புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் 

                                         தொடர்ச்சி

                                     நிறைவுப்பகுதி

51.  'சிவகாமி சரிதை',  மனோன்மணீயம்  எழுதியவர் : பெ.  சுந்தரனார்.

52.   நூல் தொகை விளக்கம், திருவாங்கூரின் பழைய அரசர்கள், ஞான சம்பந்தரின் காலம் என்ற மூன்று நூல்களையும் எழுதியவர் : பெ. சுந்தரனார்.

53.  பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள்.

54.  நாடக இலக்கண நூலான, 'நாடகவியல், ரூபாவாதி, கலாவதி ஆகிய நூல்களின் ஆசிரியர் : பரிதிமாற் கலைஞர்.  /  சிறப்புச் செய்தி : ரூபாவாதி என்னும் நாடகம் எழுதி, தாமே ரூபாவாதியாகவும் நடித்துக் காட்டியவர் இவர்.

55.  மறைமலை அடிகளின் இயற்பெயர் : வேதாசலம்.  

56.  இளமையில் முருகவேள் என்னும் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் : மறைமலை அடிகள் ஆவார்.

57.  முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை : மறைமலை அடிகள்.

58.  சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் : மறைமலை அடிகள் ஆவார். 

59.  சாதி வேற்றுமையும், போலிச் சைவமும் என்ற நூலின் ஆசிரியர் : மறைமலை அடிகள்.

60.  மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, தொலைவில் உணர்தல், மனவசியம், யோகா நித்திரை, இறந்தபின் இருந்த நிலை, கோகிலாம்பாள் கடிதங்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர் : மறைமலை அடிகள்.

61.  வடமொழி - தமிழ்மொழி அகராதி வெளியிட்டவர் : நீலாம்பிகை அம்மையார். ( மறைமலை அடிகளாரின் மகள் ஆவார், இவர் ).

62.  சைவ சித்தாந்த சண்டமாருதம் எனப்படுபவர் : சோமசுந்தர நாயகர்.

63.  திரு. வி. க. அவர்களின் முழுப்பெயர் : திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கல்யாண சுந்தரனார்.

64.  இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கம் அமைத்தவர் : திரு. வி. க. ஆவார். 

65.  திரு. வி. க. எழுதிய சமுதாய நூல்கள்  மற்றும் சீர்திருத்த நூல்கள் : பெண்ணின் பெருமை, காதலா முடியா சீர்திருத்தமா, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, என் கடன் பணிசெய்து கிடப்பதே, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்.

66.  திரு. வி. க எழுதிய சமய நூல்கள் : முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், இமயமலையும் தியானமும், உள்ளொளி.

67.  திரு. வி. க. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் : தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு.

68.  திரு. வி. க. பாடிய செய்யுள் நூல்கள் : முருகன் அருள் வேட்டல், கிறித்து அருள் வேட்டல்.

69.  பெரிய புராணத்தைப் பதிப்பித்தவர் : திரு. வி.  க. அவர்கள்.

70.  முத்தைத்தரு என்று தொடங்கிப் பாட ஆரம்பித்தவர் : அருணகிரிநாதர்.

71.  அதிமதுரைக் கவிராயரோடு வாதிட்டு எமகண்டம் பாடி அவனைத் தோற்கடித்தவர் : காளமேகம் ஆவார்.

72.  நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் என்று சிலேடை பாடியவர் : காளமேகம்.

73.  கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான் தன்சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும்.  என்றெல்லாம் எழுதியவர் : காளமேகம்.

74.  சைவ சித்தாந்த சிறுகாப்பியம் என்று அழைக்கப்படுவது : பண்டார மும்மணிக்கோவை ஆகும்.

75.  நீரோட்டக யமக அந்தாதி, கற்பனைக்கு களஞ்சியம் : பாடியவர் : சிவப்பிரகாசர் ஆவார்.

76.  நெஞ்சகமே கோவில்;  நினைவே சுகந்தம்!  பாடியவர் : தாயுமானவர்.

77.  நவீன கம்பர் : மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆவார்.

78.  சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பாடியவர் : மீனாட்சி சுந்தரனார்.

79.  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும், அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அடிகளுக்குச் சொந்தக்காரர் : இராமலிங்க அடிகள் ஆவார்.

80.  இங்கித மாலை, சர்வ சமய சமரசக் கீர்த்தனை பாடியவர் : வேதநாயகம் பிள்ளை அவர்கள்.

   இவற்றுடன் புலவர்களின் அருந்தமிழ்த் தொண்டு நிறைவு பெற்றது.  


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,