தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் தொடர்ச்சி

 


                                     புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் 

                                         தொடர்ச்சி 

31. கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, மேல்விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியவர் : அருணகிரிநாதர்.

32.  தாயுமானவ அடிகளின் ஊர் : திருமறைக்காடு  /  கண்ட சைவம் : சித்தாந்த சைவம்  /   இவரது ஆசிரியர் : திருமூலர் மரபில் வந்த மெளன குரு தேசிகர் ஆவார்.

33.  வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நீந்திக் கடந்தவர் : தாயுமானவர்.

34.  'தமிழ் மொழியின் உபநிடதம்' என்று அழைக்கப்படுகின்ற பாக்கள்:  தாயுமானவரின் பாக்கள்.

35.  'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்று பாடியவர் : தாயுமானவர்.

36.  பத்துக் கம்பன், தமிழ்க் காளிதாசன், தமிழ் வியாசன் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் : திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

37.  சூத் சங்கிதை, குசேலோபாக்கியானம், கந்தர் சஷ்டி கவசம் மூன்றையும் வல்லூர் தேவராசர் வெளியிட மனமுவந்து கொடுத்தவர் : மீனாட்சிசுந்தரனார்.

38.  இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் : மருதூர்.

39.  'திருவருட்பா' பாடியவர் : இராமலிங்க அடிகள்.

40.  சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகியவற்றின் ஆசிரியர் : இராமலிங்க அடிகள்.

41.  இராமலிங்க அடிகளின் ஆன்மீக நெறி : ஆன்மீக நேய ஒருமைப்பாடு.

42.  நீதிபதி வேதநாயகம் பிள்ளை அழைக்கப்படும் விதம் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை.  /  அவரது சொந்த ஊர் : குளத்தூர்.

43.  பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை.  / தமிழின் முதல் நாவல். 

44.  தமிழின் முதல் சட்ட நூலான 'சித்தாந்த சங்கிரகம்' எழுதியவர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

45.  மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய வேறு சில நூல்கள் : பெண்மதி மாலை, பெண் கல்வி, பெண் மானம், சுகுணசுந்தரி, நீதிநூல், திருவருள் அந்தாதி, பெரியநாயகி பதிகம் ஆகியன.

46.  தமிழறிஞர் உ. வே. சா. அவர்களின் முழுப்பெயர் : உத்தமதானபுரம் வேங்கட சுப்பனார் மகனார் சாமிநாதனார்.  /  அதாவது அவரது இயற்பெயர் : வேங்கடராமன் ஆகும்.

47.  அறிவியல் நோக்கில் அமைந்த பதிப்பு முறையின் தந்தை : தமிழறிஞர் உ. வே. சா.,

48.  சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் பதிப்பித்தவர் : தமிழறிஞர் உ. வே. சா.,

49.  'சங்க காலத் தமிழும் பிற்காலத்துத் தமிழும்',  'திருவள்ளுவரும் திருக்குறளும்',   'என் சரிதம்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் போன்றவற்றின் ஆசிரியர் : தமிழறிஞர் உ. வே. சா.,

50.  சிலப்பதிகாரக் கதைச்சுருக்கம், மணிமேகலைக் கதைச் சுருக்கம், உதயணன் கதைச் சுருக்கம் ஆகியவற்றை வெளியிட்டவர் : தமிழறிஞர் உ. வே. சா.,


                          இதன் தொடர்ச்சி  அடுத்த பதிவில்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,