தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

உளவியல் : தாள் - 1 ஒரு வரித் தகவல்கள்

 TET PSYCHOLOGY PAPER - 1

ஆசிரியர்த் தகுதித் தேர்வு 

உளவியல் : தாள் - 1

ஒரு வரித் தகவல்கள் 

  1. உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம்  : சிசுப்பருவம்.
  2. வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் சிக்கல் : வளர்ச்சிசார் சிக்கல்கள் 
  3. மனித வளர்ச்சியின் பருவங்கள் : எட்டு.
  4. சிசுப்பருவம் : 0 - 1 ஆண்டுகள் 
  5. குறுநடைப் பருவம் : 1 - 3 
  6. பள்ளிமுன் பருவம் : 3 - 6 
  7. பள்ளிப்பின் பருவம் : 6 - 10 
  8. குமரப்பருவம் : 10 - 20 
  9. கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது : 14 ஆண்டுகள் வரை.
  10. குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வளருகிறது.
  11. தொடக்கக் கல்வி பயில வரும் குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி : 90 %.
  12. எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூகக் கோட்பாடு என்பதன் நிலைகள் : எட்டு.
  13. குழந்தை, தனியான ஒரு சொல் பேசும் மாதம் : 18 மாதங்கள் வரை.
  14. சிறு வாக்கியங்களைப் பேசத் தொடங்கும் மாதம் : 18 - 24 மாதங்கள்.
  15. ஒரு குழந்தை, வளர்ந்தவர்களைப் போன்று மொழியைக் கையாளும் ஆண்டுகள்  :  5 - 6  ஆண்டுகள். 
  16. குழந்தை வெளி உலகத்திலிருந்து பிரிந்து தன்னை அடையாளம் கொள்ளுவதன் பெயர் : தன்னடையாளம்.
  17. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடும் என்று கூறியவர் : எரிக்சன்.
  18. மாணவ ஆசிரியர், கற்பித்தல் பயிற்சிக்குச் சென்று குழந்தைகளின் எடை, உயரம் காணும் முறை : உற்றுநோக்கல்.
  19. 3 - 6 வயதுள்ள குழந்தைகள் பயிலும் பள்ளி :முன்-தொடக்கப் பள்ளி 
  20. குழந்தைகளுக்கான கற்கும் உரிமையை ஐ. நா. சபை அறிவித்த ஆண்டு : 1959, நவம்பர் 20.
  21. உடல் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படும் பருவங்கள் : பள்ளிப்பருவம் முதல் குமரப்பருவம் வரை.
  22. நாளமில்லாச் சுரப்பிகள் சுரப்பது : வளர்ச்சி ஹார்மோன் ( வேதி )
  23. நாளமுள்ள  சுரப்பி சுரப்பது : நொதி.
  24. பிட்யூட்டரியில் ஹார்மோன்  அதிகமாகச் சுரந்தால் : உடல் பருமன் / அசாதாரண உடல் வளர்ச்சி 
  25. பிட்யூட்டரியில் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் : குள்ளத்தன்மை 
  26. அட்ரினல் சுரப்பி சுரப்பது : அட்ரினலின்.
  27. அட்ரினலின் பயன் : உடல் அவசர காலங்களைச் சமாளிக்க.
  28. தைராய்டு சுரப்பி சுரப்பது : தைராக்சின் 
  29. தைராக்சின் பயன் : எலும்புகள் & நரம்பு மண்டல வளர்ச்சிக்கு 
  30. பாராதைராய்டு சுரப்பது : பாராதைராக்சின் 
  31. பாராதைராக்சின் : பயன் : கால்சியம், பாஸ்பரஸ் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சிக்கு.
  32. தைராக்சின் ( குழந்தைகளுக்கு ) அதிகமாகச் சுரந்தால் ஏற்படும் கெடுதல் : கிரிட்டினிசம் 
  33. தைராக்சின் குறைவாகச் சுரந்தால் ஏற்படும் கெடுதல் : முன்கழுத்துக் கழலை.
  34. நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு : நியூரான்.
  35. தூண்டல்களைப் பெறும் நியூரானின் பகுதி : டென்டிரைட்.
  36. நியூரானின் உடல் பகுதியின் பெயர் : சோமா.
  37. சொற்கள், உருவங்கள் போன்றவற்றைக் குழந்தைகள் பயன்படுத்தும் திறனின் பெயர் : குறியீட்டுச் சிந்தனை.
  38. குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சியின் பெயர் : தர்க்கமுறைச் சிந்தனை.
  39. குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி முடிவெடுக்கும் திறனின் பெயர் : தர்க்கமுறைச் சிந்தனை.
  40. குறியீட்டுச் சிந்தனை என்பது : பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு, மொழிப் பரிமாற்றம்.
  41. குறியீடுகளைக் கற்பதால் வளர்ச்சி அடையும் திறன் : சிந்தனைத் திறன்.
  42. குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிப்பதால் 'தானே தொடங்கும் திறன்' ஏற்படும் வயது : 2 - 3 ஆண்டுகள்.
  43. குழந்தை ஒரு பொருளுக்கு ஓர் எண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் : வயது 3 - 6.
  44. ஆரம்பக் கல்வியில் குழந்தைகள் ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கத்தை அடையும் வயது : 11 - 12.
  45. ஆசிரியர் கருத்துகளைக் கூறினால் மறுப்பின்றி ஏற்றுக் 
  46. கொள்ளும் பருவம் : ஆரம்பக் கல்வி நிலை 
  47. ஒழுக்கப்பயிற்சியில் பெரும்பங்கு இதற்கு உண்டு : 
  48. பார்த்துச்செய்தல்.
  49. அறிதல் திறன் வளர்ச்சி பற்றிக் கூறுபவர் : பியாஜே.
  50. பியாஜேயின் 'ஒருவருடைய அறிவுசார்' என்றசொல் குறிப்பது:ஸ்கீமா 
  51. பியாஜே கூறும் அறிதல் திறன் வளர்ச்சியின் படிநிலைகள் : நான்கு.
  52. அறிதல் திறன் வளர்ச்சியின் முதல் படிநிலையின் பெயர் : புலன் இயக்கப்படுதல்  / 0 - 2 ஆண்டுகள்.
  53. அறிதல் திறன் வளர்ச்சியின் இரண்டாம் படிநிலையின் பெயர் : மனச் செயல்பாட்டுக்கு முந்தைய நிலை / 2 - 7 ஆண்டுகள்.
  54. அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் படிநிலையின் பெயர் : கண்கூடாகப் பார்ப்பதைக் கண்டுணரும் பருவம் / சிந்தித்துச் செயல்படுதல் : 7 - 12 ஆண்டுகள்.
  55. அறிதல் திறன் வளர்ச்சியின் இறுதிப் படிநிலையின் பெயர் : முறையான மனச் செயல்பாட்டுப் பருவம்  / எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுதல்:  12 ஆண்டுகளுக்கு மேல்.
  56. குழந்தைகள் 'பின்பற்றிக் கற்றலு'க்கு உதாரணமாக இருப்பவர்கள் : பெற்றோர்கள், ஆசிரியர்கள்.
  57. கற்றல் என்பது : இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்.
  58. கருத்தியல் தோன்றுவது : 10 வயதிற்கு மேல்.
  59. ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு : பற்றுகள்.
  60. நல்லொழுக்கத்திற்கான விதைகள் ஊன்றும் கல்வி நிலை : ஆரம்பக் கல்விநிலை.
  61. கற்கும் பொருளுக்கு வலமாக அமைவது : இயற்கைப் பொருள்கள். 
  62. ஒழுக்க வளர்ச்சியைப் பற்றிக் கூறிய உளவியல் அறிஞர் : பியாஜே.
  63. மனித வளர்ச்சி என்பது : மரபு நிலை + சூழ்நிலை 
  64. மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பவை : அறிவு வளர்ச்சி & ஒழுக்க வளர்ச்சி 
  65. குழந்தை பிறந்த 2 - 3 ஆம் ஆண்டுகளில் ஏற்படும் பிரச்சினை : சுதந்திரமாக இயங்குதல்  /  வெட்கப்படுதல்.
  66. குழந்தை பிறந்த 3 - 5  ஆண்டுகளில் ஏற்படும் பிரச்சினை : தானே செயலாற்றுதல்  /  குற்ற உணர்வு.
  67. பின்முதிர்ப் பருவத்தில் ஏற்படும் பிரச்சினை : நேர்மை அல்லது நம்பிக்கை : இழத்தல்.
  68. மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலை : மனவெழுச்சி ஆகும்.
  69. மனவெழுச்சியின் செயல்பாடு : உடல், உள்ளத்தைக் கிளர்ச்சி அடையச் செய்யும்.
  70. நிறையாளுமை பெற்றவரின் பண்புகள்  : நம்பிக்கை, தன்னாட்சி, கடின உழைப்பு போன்றவை.
  71. குறையாளுமை பெற்றவரின் பண்புகள்  :  அவநம்பிக்கை, குற்ற உணர்வு, தாழ்வுணர்வு போன்றவை
  72. உடலால் செய்யும் செயல்கள் : நடத்தல், நீந்துதல்.
  73. பலபுலன்வழிக் கற்பதன் பயன் : வெகு நாள்கள் வரை நினைவில் இருக்கும்.
  74. பாடம் கற்பித்தலின் முதல் படி : ஆயத்தம்.
  75. நினைவு கூர்தலின் முதல் படிநிலை : கற்றல்.
  76. ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது : மனவெழுச்சி அதிர்வுகள்.
  77. மாணவர்களின் மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயன்படுத்துதல், பொருத்தமாக வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் வழிகாட்டுவது : ஆசிரியரின் கடமை ஆகும்.
  78. அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய விரும்பக்கூடிய ஒரே மொழி : அன்பு.
  79. ஓர் இலக்கை அடைய முயன்று வெற்றி பெறும் உணர்ச்சி : மகிழ்ச்சி.
  80. தன்னையும் பிறரையும் கெடுத்து எப்பொழுதும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் உணர்வு : சினம்.
  81. சினங்களின் வகைகள் : 3 : திக்கற்ற சினம், பேச மறுக்கும் சினம், பழிவாங்கும் சினம்.
  82. ஓரளவு அச்சமும் சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி : பொறாமை.
  83. மனிதர்களிடம் காணப்படும் வெறுப்பூட்டும் எதிர்மறை மனவெழுச்சி : அச்சம்.
  84. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளின் மனவெழுச்சி : கவலை.
  85. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை : தரும சிந்தனை
  86. பயம் என்பது உண்மை போல் தோன்றும் உணர்வு : பொய்.
  87. ஆரோக்கியமற்ற உறவு, தாழ்வு மனப்பான்மை : பிரச்சினையின் ஆணிவேர்.
  88. மனநலத்தின் வெளிப்பாடுகள் : உற்சாகமான மனநிலை, உணவில் திருப்தி, நல்ல உறக்கம்.
  89. திருடுதல் என்பது : நெறிபிறழ் நடத்தை 
  90. பதற்றம் என்பது : மிதமான மனநோய்.
  91. மனச்சிதைவு என்பது : தீவிரமான மன நோய்.
  92. பொய்ப் பேசுதல் : பிரச்சினை நடத்தை 
  93. ஒழுக்கமின்மை : பிரச்சினை நடத்தை 
  94. ஆங்கிலத்தில் நடத்தையின் குறிப்பு எழுத்துகள் :  S                    R 
  95. பயம், பதற்றம், தாழ்வு மனப்பான்மை, துக்கம் காரணமாக ஏற்படும் நோய் : சுவாச மண்டல நோய்.
  96. தீவிர உணர்ச்சிகள் நரம்பு மண்டலத்தை அதிகமாக முடுக்குவதால், நாளமில்லாச் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் ஏற்படும் நோய் : நீரிழிவு நோய்.
  97. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், மனத்தினுள் அடக்குவதால் ஏற்படும் நோய் : ஜீரண மண்டல நோய்.
  98. தோல் அழற்சி, அரிப்பு, வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் நோய் : தோல் நோய்.
  99. மன அழுத்தம், மன உளைச்சல், அதிகளவு பயம் ஆகியவற்றால் ஏற்படும் நோய் : தசை, மூட்டு நோய்கள்.
  100. மன அழுத்தங்கள், பகைமை உணர்வு, குற்ற உணர்வுகளால் ஏற்படும் நோய் : இதய இரத்த நாள நோய்  /  உயர் இரத்த அழுத்தம்.
  101. மனத்தில் மறைத்து வைத்து தீவிரமான மன உணர்வுகளால் ஏற்படும் நோய் : மாதவிடாய் சார்ந்த நோய் 
  102. புதிய சூழலோடு ஒத்துப் போகும் உறவின் பெயர் : இணக்கம்.
  103. பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் எடை : 350 கிராம்.
  104. பருவமடைந்தபின் மூளையின் எடை : 1260 - 1400 கிராம்.
  105. ஒருவன் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் புரிந்து கொண்டு செயல்படும் திறன் : தன்னை அறிதல் திறன்.
  106. SWOT  என்பதன் விரிவு : Strength Weakness Opportunity Threat 
  107. ஒரு தனிப்பட்ட மன வன்மையின் பெயர் : கவனம் ஆகும்.
  108. ஒரு பொருளையோ செயலையோ தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியின் பெயர் : கவனித்தல்.
  109. மனத்தில் சேமித்து வைத்துள்ள விவரங்களின் பெயர் : நினைவு.
  110. பொருளுணர்ந்து கற்பதன் விளைவு : நீண்ட நாள் நினைவில் இருத்தல்.
  111. நம் புலன்களில் ஏற்படும் தூண்டல்கள் அனைத்தும் முதலில் செல்லும் பகுதி : குறுங்கால நினைவுப் பகுதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,